search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா சட்டசபை கலைப்பு"

    சட்ட சபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டு இருந்த தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவ் இப்போது அந்த முடிவை கைவிட்டார். #TelanganaAssembly #ChandrasekharRao

    ஐதராபாத்:

    ஆந்திரா பிரிவினைக்குப் பின் தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியைப் பிடித்தது. சந்திரசேகர ராவ் முதல்- மந்திரியாக இருந்து வருகிறார்.

    தெலுங்கானா சட்ட சபையின் பதவி காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கிறது. இந்த நிலையில் மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகிறது.

    இந்த 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து தெலுங்கானா சட்டசபை தேர்தலையும் நடத்தலாமா என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தி வந்தார். இறுதியில் சட்ட சபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம் என்று முடிவுக்கு வந்தார்.

    இன்று மதியம் 1 மணிக்கு ரங்காரெட்டி மாவட்டத்தில் தெலுங்கானா கட்சி மாநாட்டை முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கூட்டி இருந்தார். இதற்காக 2,000 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வதற்காக சேர்கள், பந்தல்கள் போடப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மாநாட்டு பந்தல் சரிந்தது. மைதானத்தில் வெள்ளம் தேங்கியது.

    இதனால் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை கலைப்பு அறிவிப்பையும் ஒத்திவைத்தார். இதுபற்றி தெலுங்கானா கட்சி நிர்வாகிகள் கூறும்போது, சந்திரசேகரராவ் சட்ட சபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டு இருந்தார். இப்போது அவர் அந்த முடிவை கைவிட்டார்.

    2019-ம் ஆண்டு மே மாதம் வரை சட்டசபையின் பதவி காலம் உள்ளது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவை சந்திரசேகரராவ் எடுத்து இருப்பதாக தெரிவித்தனர். #TelanganaAssembly #ChandrasekharRao

    ×